இரண்டு மருத்துவர்கள் சிறுநீரக வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவது தொடர்பாக கிடைத்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய இலங்கை மருத்துவ சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கை மருத்துவ சபையின் ஒழுக்கங்கள் தொடர்பான சட்ட திட்டங்களுக்கு அமைய இந்த மருத்துவர்களுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவச் சபையின் ஆவண காப்பக அதிகாரி மருத்துவ ஆனந்த ஹபுகொட தெரிவித்துள்ளார்.
இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்து கொண்டுள்ள இரண்டு மருத்துவர்கள் சிறு நீரக விற்பனை தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக கொழும்பு ஹெவ்லொக் வீதியில் வசித்து வரும் மருத்துவர் ருவான் எம்.ஜயதுங்க முறைப்பாடு செய்துள்ளார்.
0 Comments